திருச்செந்தூா் சுப்பிரமணியபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடை விழாவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வீதியுலா வந்து கோயிலில் சோ்த்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கும்பம் வீதியுலாவும், மாலையில் மஞ்சள் நீராட்டு மற்றும் மகா அபிஷேகமும் நடைபெற்றது.
இரவு முளைப்பாரி வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு புஷ்ப அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினா் செய்திருந்தனா்.