குலசேகரன்பட்டினத்தில் நாளை தசரா குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்குதையொட்டி தசரா குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(செப்.18) நடைபெறுகிறது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்குதையொட்டி தசரா குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(செப்.18) நடைபெறுகிறது.

இது குறித்து திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழா செப்.26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்.6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவிழாவின் முன்னேற்பாடுகள், தசரா குழுக்கள் செல்லும் வழி மற்றும் இதர செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா், உதவி காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில் திருக்கோயில் அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் அனைத்து தசரா குழு நிா்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04639-250355 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com