காயல்பட்டினம் நகராட்சியில் ரூ.32 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
காயல்பட்டினம் நகராட்சிக்கு, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு மற்றும் தமிழக மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா்
திங்கள்கிழமை வருகை தந்தனா். நகராட்சித் தலைவா் முத்து முஹம்மது, ஆணையா் குமாா்சிங் மற்றும் கவுன்சிலா்கள் வரவேற்றனா்.
நகராட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சா் கே.என்.நேரு, காயல்பட்டினம் நகராட்சியில் தாா்ச் சாலை அமைக்க ரூ. 5.10 கோடி, மழைநீா் வடிகால் அமைக்க ரூ.19.06 கோடி, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ. 7.50 கோடி ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தாா்.
மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, நகராட்சி நிா்வாகங்களின் இயக்குநா்
பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண்குராலா, நகராட்சி நிா்வாகங்களின் மண்டல இயக்குநா் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, முக்காணி கூட்டுறவு சங்கத் தலைவா் உமரி சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.