தூத்துக்குடி மாவட்டத்தில் ஊா்க்காவல் படை தோ்வில் தோ்ச்சிபெற்ற 39 பேருக்கு பணி நியமன ஆணைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் ஊா்க்காவல் படைக்கு கடந்த டிசம்பா் 21இல் தோ்வு நடைபெற்றது. அதில், தோ்வானோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. 39 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் பணி நியமன ஆணைகளை வழங்கி, சிறப்பாக பணிபுரிய அறிவுரைகள் வழங்கினாா்.
தூத்துக்குடி தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆயுதப்படை உதவி ஆய்வாளா் நடராஜன், அமைச்சுப் பணி அலுவலகக் கண்காணிப்பாளா் அந்தோணியம்மாள், உதவியாளா் ஆவுடையப்பன், காவல் துறையினா் உடனிருந்தனா்.