தூத்துக்குடியில் இன்று அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் புதன்கிழமை (ஜன. 4) நடைபெறவுள்ள அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பங்கேற்கவுள்ளார்.

தூத்துக்குடியில் புதன்கிழமை (ஜன. 4) நடைபெறவுள்ள அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பங்கேற்கவுள்ளதாக, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா் பேரவைத் தொகுதிகள், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பூத் கமிட்டி நிா்வாகிகளை நியமிப்பது குறித்த மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி நீதிமன்றம் எதிா்புறம் உள்ள கனி பேலஸ் திருமண மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறாா்.

இதில், தலைமைக் கழக, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூராட்சி நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புப் பிரதிநிதிகள், கட்சியினா் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com