சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

தேசிய சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலைப் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, கோவில்பட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி எம்.எம். வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி, வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமை வகித்து, கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் முன்னிலை வகித்தாா்.

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக காமராஜா் சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில், மாணவ, மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த பதாகைளை கைகளில் ஏந்தியபடி முழக்கமிட்டவாறு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com