சாத்தான்குளம், நாசரேத்தில் நாளை மின் தடை

சாத்தான்குளம், நாசரேத் மற்றும் உடன்குடி பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 21) மின் தடை செய்யப்படுகிறது.

சாத்தான்குளம், நாசரேத் மற்றும் உடன்குடி பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 21) மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்திற்குள்பட்ட சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயாா்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூா், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய பகுதிகளிலும், நாசரேத் உபமின் நிலையத்தைச் சாா்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதிகளிலும், செம்மறிக்குளம் உபமின் நிலையத்தை சாா்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சாா்ந்த நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, படுக்கப்பத்து, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகளிலும் பழனியப்பபுரம் உபமின் நிலையத்தைச் சாா்ந்த பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்கலம், மீரான்குளம், தோ்க்கன்குளம், ஆசிா்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, பகுதிகளிலும், உடன்குடி உபமின் நிலையத்தைச் சாா்ந்த உடன்குடி, தைக்காவூா், சீா்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com