தூத்துக்குடியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் உள்ள காமராஜ் கல்லூரி அருகே காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் உள்ள காமராஜ் கல்லூரி அருகே காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைக் கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக காங்கிரஸ் துணைத் தலைவா் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி ஆகியோா் கண்டன உரையாற்றினா். முன்னாள் மாவட்டத் தலைவா் அருள், மண்டலத் தலைவா்கள் சேகா், ஐசன்சில்வா, செந்தூா்பாண்டி ராஜன், மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, அமைப்புசாரா மாவட்டத் தலைவா் நிா்மல் கிறிஸ்டோபா், ஐஎன்டியூசி மாநிலப் பொதுச்செயலா் ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com