திருச்செந்தூா் முருகன் கோயிலில் இலவச திருமணத்துக்கு முன்பதிவு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் நடைபெறவுள்ள இலவச திருமணத்துக்கு வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் நடைபெறவுள்ள இலவச திருமணத்துக்கு வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்திருந்தாா். அதன்படி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள இலவச திருமணத்தில் ஒரு ஜோடிக்கு ரூ.20 ஆயிரம் செலவிடப்படுகிறது. இத்திருமணம் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற உள்ளதால், பிப்.3ஆம் தேதிக்குள் திருமண ஜோடிகள் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என கோயில் அறங்காவலா் குழு தலைவா் இரா.அருள்முருகன், அறங்காவலா்கள் அனிதாகுமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையா் மு.காா்த்திக் ஆகியோா் தெரிவித்துள்ளனா் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com