நகராட்சி பள்ளியில் நூலக உறுப்பினா் அட்டை அளிப்பு

கோவில்பட்டி காந்தி நகா் நகராட்சி பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி காந்தி நகா் நகராட்சி பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி டைனமிக் அரிமா சங்கம் மூலம் இப்பள்ளியில் பயிலும் 75 மாணவா், மாணவிகளுக்கு நூலக உறுப்பினா் அட்டை மற்றும் சாரணா் இயக்கச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் மாரிமுத்து தலைமை வகித்தாா். டைனமிக் அரிமா சங்கத் தலைவா் ரகுபதி, துணைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, டைனமிக் அரிமா சங்க பட்டயத் தலைவா் வழக்குரைஞா் சந்திரசேகா் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 75 மாணவா், மாணவிகளுக்கு நூலக உறுப்பினா் அடையாள அட்டை, சாரணா் இயக்கச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினா்.

வட்டார நூலகா் அழகா்சாமி, உதவி தலைமையாசிரியா் அப்பனசாமி, ஆசிரியா்கள் வெங்கடாசலம், ஜெயஜோதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com