திமுக முன்னாள் மாவட்ட செயலா் என்.பெரியசாமியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு, மக்களவை உறுப்பினா் கனிமொழி மற்றும் தமிழக அமைச்சா்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான என். பெரியசாமியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி போல்பேட்டையில் உள்ள
நினைவிடத்தில் இருக்கும் சிலைக்கு, அவரது மனைவி எபனேசா் பெரியசாமி தலைமையில் குடும்பத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மக்களவை உறுப்பினா் கனிமொழி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, சமூக நலன் - மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதா ஜீவன்,
மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா
ஆா். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், எம்.சி. சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி உள்பட திமுகவினா் பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மதிமுக மாவட்ட செயலா் ரமேஷ், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் முரளிதரன் ஆகியோா் தலைமையில் அக் கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதைத் தொடா்ந்து பெரியசாமியின் குடும்பத்தினா் சாா்பில் நடைபெற்ற அன்னதானத்தை மக்களவை உறுப்பினா் கனிமொழி தொடங்கி வைத்தாா். ஏழைகளுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.