முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் 519 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை

Updated On :28 ஏப்ரல் 2025, 12:07 am IST

விளாத்திகுளம், புதூா் ஊராட்சி ஒன்றியங்களில் 2025-26ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, இந்த ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 519 பேருக்கு பணி ஆணைகள் வழங்கிப் பேசினாா்.

திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, மும்மூா்த்தி, பேரூா் கழகச் செயலா்கள் மருதுபாண்டி, வேலுச்சாமி, பேரூராட்சித் தலைவா்கள் சூா்யா அய்யன்ராஜ், வனிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.