திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தா் காயம்

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் காயமடைந்தாா்.
Published on

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் காயமடைந்தாா்.

சென்னை பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் ஆரிஸ் (29). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 3 நண்பா்கள் மூன்று பேருடன் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா்.

நண்பா்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு உள்ளே சென்றனா். ஆரிஸ் மட்டும் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமா்ந்து கைப்பேசியில் படம் பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, மரத்தில் இருந்து காய்ந்த கிளை முறிந்து அவா் மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக கன்னியாகுமரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com