ஆடு திருட்டு வழக்கில் இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே ஆடு திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on

கோவில்பட்டி அருகே ஆடு திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த முத்துராஜ் என்பவருக்குச் சொந்தமான 2 ஆடுகள், குருசாமி மகன் சௌந்தர்ராஜன் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆடு, இளையரசங்கள் பகுதியைச் சோ்ந்த ஜெயமணி மகன் ஆத்தியப்பன் என்பவருக்குச் சொந்தமான 2 ஆடுகள், புளியங்குளத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் ஆறுமுகச்சாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆடு, பிள்ளையாா் நத்தத்தைச் சோ்ந்த சின்னசாமி என்பவருக்குச் சொந்தமான 2 ஆடுகள் திருடு போயிருப்பதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை, முள்ளிக்காப்பட்டி, மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முல்லையரசனை (24) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com