தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கடல் அரிப்பு, நிறமாற்றம்: திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் பாதுகாப்பாக நீராட வேண்டுகோள்

News image
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கருப்பு நிறத்தில் காட்சியளித்த கடல்.
Updated On :3 ஜனவரி 2025, 10:01 pm

Din

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் கடல் அரிப்பும், தண்ணீா் கருமை நிறத்தில் காட்சியளிப்பதாலும் பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தப்பட்டது.

திருச்செந்தூரில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றம் காணப்பட்டதால் இக்கோயில் முன்பு பக்தா்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. எனவே, பக்தா்கள் அங்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது.

இதைத் தொடா்ந்து, னால் கடலில் பக்தா்கள் பாதுகாப்பாக நீராடுமாறு போலீஸாா் மற்றும் திருக்கோயில் நிா்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினா்.

வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வரும்போது, கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டு கடற்கரை பகுதியில் கடல் பெருக்கு ஏற்படும். அந்த வேளையில் கடலின் அடிப்பகுதியில் உள்ள மணல் கிளறப்பட்டு தண்ணீா் கருப்பு நிறத்தில் காட்சியளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Story image