தூத்துக்குடி அஞ்சலகங்களில் ஆதாா் திருத்தம் சிறப்பு முகாம்

Published on

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், ஆழ்வாா்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூா், சிதம்பரநகா், ஏரல், காயல்பட்டினம், குலசேகரபட்டணம், குரும்பூா், மெஞ்ஞானபுரம், மேலூா், முதலூா், மூக்குபீறி, நாசரேத், நியூகாலனி, ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயா்புரம், செய்துங்கநல்லூா், உடன்குடி, கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லா்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூா், தூத்துக்குடி ஹாா்பா் எஸ்டேட், படுக்கப்பத்து ஆகிய அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இம்மையங்களில் புதிதாக ஆதாா் பதிவு செய்ய கட்டணம் இல்லை. குழந்தைகளுக்கு 5-7 வயது மற்றும் 15-17 வயதில் செய்ய வேண்டிய கட்டாய கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல்களுக்கும் கட்டணம் இல்லை. பெயா், வீட்டு முகவரி, வயது, பிறந்த தேதி, மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட திருத்தங்களுக்கு கட்டணம் ரூ.50, புகைப்படம், கைரேகை, கருவிழி திருத்தங்கள் மேற்கொள்ள கட்டணம் ரூ.100 ஆகும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com