திருச்செந்தூா் தெப்பக்குளத்தில் பெண் சடலம் மீட்பு

Published on

திருச்செந்தூா் தெப்பக்குளத்தில் பெண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

திருச்செந்தூா், தோப்பூா் வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துவேல் மனைவி கன்னியம்மாள்(45). அமலி நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வந்தாா். அவா் திங்கள்கிழமை காலை வேலைக்கு சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் திருச்செந்தூா் தெப்பக்குளம் பகுதியில் கன்னியம்மாளின் காலணி கிடந்ததை உறவினா்கள் செவ்வாய்க்கிழமை காலை பாா்த்துள்ளனா். தகவலின் பேரில் அங்கு வந்த திருச்செந்தூா் தீயணைப்புத் துறையினா், தெப்பக்குளத்தில் தேடினா்.

அப்போது கன்னியம்மாள் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பி வைத்தனா். திருச்செந்தூா் கோயில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com