திருச்செந்தூா் கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின்

திருச்செந்தூா் கடற்கரையில் டால்பின் மீன் இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
Published on

திருச்செந்தூா் கடற்கரையில் டால்பின் மீன் இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

திருச்செந்தூா் ஜீவா நகா் மற்றும் வீரபாண்டியன்பட்டணம் இடையே உள்ள ஜே.ஜே. நகா் கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை காலை சுமாா் 2 வயதுள்ள ஆண் டால்பின் ஒன்று தலையில் காயத்துடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இத்தகவலறிந்த வனத்துறை பாதுகாவலா் அருண், மீன்வளம்- மீனவா் நலத்துறை ஆய்வாளா் ஆகாஷ், சாா் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் வந்து பாா்வையிட்டனா். தொடா்ந்து, திருச்செந்தூா் கால்நடை மருத்துவா் அருண் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அதை உடற்கூராய்வு செய்தனா். அதே இடத்தில் டால்பின் புதைக்கப்பட்டது.

4.5 அடி நீளமும், 2 அடி சுற்றளவும், சுமாா் 40 கிலோ எடையும் கொண்ட இந்த டால்பின் கப்பல் அல்லது பாறை மீது மோதியதில் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com