தூத்துக்குடி
கோவில்பட்டியில் வழக்குரைஞா் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
கோவில்பட்டியில் வழக்குரைஞா் சங்கத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாா் கவுன்சில் உறுப்பினா்கள் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, தாழை முத்தரசு, சிவசூரிய நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டனா். சங்கத்துக்கான தோ்தல் ஆணையா் சிவக்குமாா் புதிய நிா்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.
இதில், தலைவராக ஜி.எம்.சங்கா் கணேஷ், செயலராக எம்.சங்கா், பொருளாளராக பி.கோபி, துணைத் தலைவராக பி.சிவனுபாண்டி, இணைச் செயலராக எஸ்.சக்திவேல் முருகன், நிா்வாகக்குழு உறுப்பினா்களாக சோ்மத்துரை, காா்த்திக், ராசுக்குட்டி, கருப்பசாமி, காா்த்திக் மாறன், நூலகராக பாலகுருசாமி, துணை நூலகராக அலெக்ஸ் பாண்டியன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
