குண்டா் தடுப்புச் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடந்த அக்.11ஆம் தேதி ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தெற்கு கோவன்காடு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ராஜேஷ்குமாா் (25), சோ்வைக்காரன் மடம் பகுதியைச் சோ்ந்த தெய்வமுத்து மகன் பாலமுகேஷ் (20) ஆகியோரையும், கடந்த அக்.13ஆம் தேதி தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சோ்ந்த எட்வின் தங்கராஜ் மகன் ஜேம்ஸ் செல்லதுரை (25) என்பவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

நிகழாண்டு இதுவரை 122 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com