தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2025, 11:00 pm

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குருவி நத்தம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் காளியப்பன் (56). விவசாயி. இவா் நவ. 21ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் காமநாயக்கன்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்ததாம்.

இதில் பலத்த காயமடைந்த காளியப்பனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.