கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே தெற்குத் திட்டங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த எட்டுராஜ் மனைவி காளியம்மாள் (36). இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பி. சமுத்திரராஜ் (43).

இரு குடும்பத்துக்குமிடையே தகராறு இருந்ததாகவும், இதுகுறித்து காளியம்மாள் அளித்த புகாரின்பேரில் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டு முன் நின்றிருந்த காளியம்மாளை சமுத்திரராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சமுத்திரராஜை திங்கள்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com