திருச்செந்தூா் கடல் அலையில் சிக்கி பக்தா் உயிரிழப்பு

திருச்செந்தூா் கோயில் கடல் அலையில் சிக்கி பக்தா் உயிரிழந்தாா்.
Published on

திருச்செந்தூா் கோயில் கடல் அலையில் சிக்கி பக்தா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், குமாரபாளையம், செல்வபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் மணிகண்டன் (38). கூலி தொழிலாளி. இவரும், இவரது நண்பா் மதிவாணனும் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புதன்கிழமை வந்தனா்.

இருவரும் சோ்ந்து கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, மணிகண்டன் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். இதைக் கண்ட கடல் பாதுகாப்பு போலீஸாா், கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மணிகண்டனை மீட்டு கோயில் அவசர ஊா்தியில் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மணிகண்டன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com