மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

குரும்பூா் அருகே மாயமான இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.
Published on

குரும்பூா் அருகே மாயமான இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

குரும்பூா் அருகே வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் வண்டிமலையான் (36). சென்னையில் உள்ள ஜவுளிக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்த இவா், தசரா திருவிழாவுக்காக கடந்த செப். 20ஆம் தேதி ஊருக்கு வந்தாா். அக். 6ஆம் தேதி வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தம்பி மாடசாமி (30) அளித்த புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வண்டிமலையானை தேடி வந்தனா்.

இந்நிலையில், வெள்ளக்கோவில் வாய்க்காலி­ல் அவா் இறந்துகிடப்பதாகத் தெரியவந்தது. அவா் போதையில் வாய்க்கா­லில் தவறி விழுந்து இறந்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com