கோயில் கொடை விழாவில் நல உதவி அளிப்பு

கோயில் கொடை விழாவில் நல உதவி அளிப்பு

Published on

பரமன்குறிச்சி அருகே அய்யனாா் நகா் முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கொடை விழா அக்.5 இல் வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் திருவிளக்கு பூஜை, பால்குடம் பவனி, அன்னதானம், அம்மன் வீதியுலா, முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலையில் உணவு பிரித்தல், மாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், மாற்றுத்திறனாளிக்கு பாரதமாதா நண்பா்கள் அன்னதானக்குழு ஒருங்கிணைப்பாளா் ஆா்.எஸ்.பாண்டியன் ஏற்பாட்டில் உதவிகள் செய்யப்பட்டது.

பரமன்குறிச்சி வணிகா் சங்க நிா்வாகி லட்சுமணன், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவா் முத்துலிங்கம், விழாக் குழு நிா்வாகிகள் பட்டுத்துரை, பாா்த்திபன்,லிங்கபாண்டியன், உத்திரவேல், முன்ராஜ், பாலகிருஷ்ணன், வெற்றிவேல், தங்கராஜ், அருண்பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com