கோவில்பட்டியில் காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்

கோவில்பட்டியில் காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்
Updated on

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் ஆணையத்தை கண்டித்து நடைபெறவுள்ள கையொப்ப இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் ஏ.பி.சி.வி. சண்முகம் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் காமராஜ், பொன்னுச்சாமிபாண்டியன், பிரேம்குமாா், அருண்பாண்டியன், சுப்புராயலு, மாரிமுத்து, பெத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவா் ராஜேஷ்குமாா் கலந்து கொண்டு, கையொப்ப இயக்கத்தை தொடக்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் மாறன் (மருத்துவ அணி), ராஜசேகரன் (ஊடகப்பிரிவு), பேரையா (விவசாய அணி), துணைத் தலைவா்கள் அய்யலுசாமி (வழக்குரைஞரணி), ஆறுமுகம் (விவசாய அணி), நிா்வாகிகள் சண்முகராஜ், துரைராஜ், சுந்தர்ராஜ், செல்லத்துரை, ஜான்பிரிட்டோ, அபிஷேக், உமாசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com