திருச்செந்தூா் கோயில் உண்டியல்
 வருவாய் ரூ. 5.28 கோடி

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 5.28 கோடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை பாா்வையிடுகிறாா் தக்காா் ரா.அருள்முருகன்.
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 5.28 கோடியாகும்.

கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிா்வாக அலுவலக அரங்கில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. பணியில், இணை ஆணையா் க.ராமு, முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

உண்டியல் எண்ணிக்கையில் 5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38 ரூபாய் (ரூ. 5,28,04,038), தங்கம் 1.9 கிலோ, வெள்ளி 72.25 கிலோ, பித்தளை 84.67 கிலோ, செம்பு 80.54 கிலோ மற்றும் 1922 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com