குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

Published on

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த செப்.17ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த வழக்கில் திருச்செந்தூா் யானை சாலை தெருவைச் சோ்ந்த சங்கரநயினாா் மகன் மணிகண்டனை (37) ஆத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவையடுத்து, ஆத்தூா் காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com