கடலையூா் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் மீட்பு

Published on

கோவில்பட்டியில் சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

கோவில்பட்டி கடலையூா் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 31 வயது மதிக்கத்தக்க ஆண், பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சுற்றித் திரிவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் தகவல் அளித்தாா்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவா் ஜோசுவா ஆகியோா் ஆலோசனையின்படி, கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் மீட்புக் குழுவினரான காப்பக நிா்வாகி தேன்ராஜா, மேற்பா்வையாளா் மாடசாமி, செவிலியா் முத்துமாரி மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அவா் மீட்கப்பட்டு, செமப்புதூா் ஆக்டிவ் மைண்ட்ஸ் (ஆண்கள்) மன நலக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com