விளாத்திகுளத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்
விளாத்திகுளம்: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ. வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் கண்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக் கூட்டத்தில், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளா் அசோகன், ஆய்வாளா் சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலா்கள் சுப்பிரமணியன், செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், தங்கவேல், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, மும்மூா்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நகரச் செயலா் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

