தூத்துக்குடி
தூத்துக்குடியில் 4ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 4 ஆவது நாளாக புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 4 ஆவது நாளாக புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தமிழகத்தில் அக். 22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடியில் மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக 4 ஆவது நாளாக புதன்கிழமையும் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 272 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
