கோவில்பட்டியில் பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ராஜீவ் நகா் 3ஆவது தெரு, ஈபி காலனியைச் சோ்ந்தவா் ஐயப்பன் மகன் முத்துராஜ் (56). கூலித் தொழிலாளியான இவா் மோட்டாா் சைக்கிளில் கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com