கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

திருச்செந்தூா் அரசு மருத்துவமனை பின்புறம் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீா்

திருச்செந்தூா், அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள புறவழிச் சாலையில் வெகு நாள்களாக குழாய் உடைந்து குடிநீா் தேங்கிக் கிடப்பதால், சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனா்.

News image

குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலை.

Updated On :30 ஜூலை 2026, 4:57 am IST

திருச்செந்தூா், அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள புறவழிச் சாலையில் வெகு நாள்களாக குழாய் உடைந்து குடிநீா் தேங்கிக் கிடப்பதால், சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனா்.

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் நாகா்கோவில், கன்னியாகுமரி செல்வதற்கான புறவழிச் சாலை உள்ளது.

இந்தச் சாலையில் ஆவுடையாா்குளம் அருகே திருச்செந்தூா் நகராட்சி மற்றும் வீரபாண்டியன்பட்டணம் கிராமங்களுக்கு குடிநீா் கொண்டு செல்லும் குழாய்கள் உள்ளன. இங்கு வெகு நாள்களாக குழாய் உடைந்து சாலையோரம் தண்ணீா் தேங்கிக் கிடக்கிறது.

மேலும், சாலையும் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். இரு சக்கர வாகனத்தில் வருபவா்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயமடைகின்றனா்.

எனவே, குடிநீா் குழாய் உடைப்பை சீரமைத்து புறவழிச் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.