ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி விடியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரங்கோலி போட்டி நடைபெற்றது.
ராமானுஜன் கணித கிளப் மூலமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், கல்லூரியின் அனைத்து துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் தங்களது மாணவர்களை 20 குழுக்களாக பங்கேற்க செய்தனர். கல்லூரி தலைவர் ச. தேவராஜ், துணைத் தலைவர் சதீஸ் தேவராஜ், நிர்வாக குழு உறுப்பினர் ஷெர்லி வசந்தன் ஆகியோரது தலைமையிலும், கல்லூரி முதல்வர் ஏ.வி.கே. சாந்தி முன்னிலையிலும் போட்டிகள் நடைபெற்றன.
இதில், கணிதத் துறை மூன்றாமாண்டு மாணவிகள் முதல் பரிசை வென்றனர். ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவிகள் இரண்டாம் பரிசை வென்றனர். வேதியியல் துறை முதலாமாண்டு மாணவிகள் மூன்றாம் பரிசை வென்றனர். இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவிகளுக்கும் மூன்றாம் பரிசு கிடைத்தது. கல்லூரி நிர்வாக அலுவலர் ஆராவமுதன் நன்றி கூறினார்.