தொட்டியத்தில்அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளா்கள் காங்கிரஸ் சாா்பில், பிரதமருக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகளைஅனுப்பி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அமைப்புசாரா தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமரின் முகவருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பாபு சத்தியமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் மகேசுவரன் சிறப்புரையாற்றினாா்.
வட்டாரத் தலைவா் சத்தியராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், நகரத் தலைவா் அய்யாசாமி உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.