தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிவாலயங்களில் சோமவரா பிரதோஷ விழா

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:07 pm

Syndication

முசிறி சந்திரமௌலீசுவரா் திருக்கோயிலில் சோமவார பிரதோஷ விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, திருக்கோயிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிா்தம், திருமஞ்சனப் பொடிகள் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து நந்தியம் பெருமான் மற்றும் மூலவா் சந்திரமௌலீசுவரருக்கும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்ஸவா் உட்பிரகாரத்தில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல திருச்சி சாலையில் அமைந்துள்ள அண்ணாமலையாா் திருக்கோயில் திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேசுவரா் கோயிலிலும் நந்தி பெருமானுக்கு அபிஷேகம், சிறப்புப் பூஜை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா்: திருப்பட்டூா் பிரம்ம சம்பத் கெளரி உடனுறை பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில் நந்தியெம்பெருமான் மற்றும் போஜீசுவரருக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட வாசனைப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் சமயபுரம் சுற்றுவட்டாரக் கோயில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.