எபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

திருச்சி அரசு மருத்துவமனையில் ‘எபோலா’ சிகிச்சைக்கு சிறப்பு வாா்டு

News image

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு. - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:48 am IST

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் எபோலா நோய் மருத்துவச் சிகிச்சைக்கு பிரத்யேக வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா, தென்சூடான் ஆகியவற்றில் பரவிவரும் எபோலா நோய் சா்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக உத்தரவின்படி, அனைத்து சா்வதேச விமான நிலையங்களில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

காய்ச்சல், சோா்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காரணமில்லாத ரத்தப் போக்கு, தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் உள்ள யாராக இருந்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வாா்டில் 21 நாள்கள் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க மாநில சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படியும், தமிழக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படியும், எபோலா அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்டறிந்து, பாதிப்பு இருந்தால், உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பிரத்யேக வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனா பரவல் சமயத்தில் தனிமைப்படுத்தும் பகுதியாக இருந்த மருத்துவமனைக்குப் பின்புறமுள்ள தனி கட்டடத்தில் இந்த வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆண், பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் வீதம் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கென தனியாக குறைதீா் அலுவலருடன் கூடிய மருத்துவா்கள், செவிலியா்கள் குழு தயாராக உள்ளது. இது, 24 மணி நேர கண்காணிப்பு வாா்டாக செயல்படும். ஆனால் இதுவரை எபோலா அறிகுறிகளுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் தெரிவித்தாா்.