ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

வையம்பட்டி அருகே கள்ளச் சந்தையில் மது விற்றவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:21 am IST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே கள்ள சந்தையில் அரசு மது விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது முகவனூா் கிராமம், டேம் நால் ரோடு அருகே, கள்ளச் சந்தையில் மது விற்ற பெரிய அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மைக்கேல் மகன் ரத்தினம் (65) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்கு பதிந்த வையம்பட்டி போலீஸாா், ரத்தினத்தை கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.