அரியலூரில் அடையாளம் தெரியாதஆண் சடலம்
By அரியலூர் | Published on : 14th August 2013 02:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு வீட்டின் முன்பு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் அம்சவள்ளி அரியலூர் நகர காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்
துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்து கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். 5 அடி உயரம், இடது கையில் ஏ. சின்னசாமி என்றும், வலது கையில் அண்ணாமலை, மற்றும் இரட்டை இலை சின்னமும் பச்சை குத்தப்பட்டுள்ளது.
அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று அரியலூர் நகர காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.