அரியலூர் மாவட்டம் கருப்பிலாக்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட கல்லக்குடி கிராமத்தை ஒட்டி தனியார் சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து சிமென்ட் ஆலைக்கு டிப்பர் லாரி மூலம் சுண்ணாம்புக் கல் ஏற்றிக்கொண்டு கல்லக்குடி கிராம சாலை வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.
குறுகிய சாலையாக இருப்பதால் இவ்வழியே செல்லும் லாரிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன என கிராம மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, கடந்த சில மாதங்களாக லாரிகள் இயக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை போலீஸார் பாதுகாப்புடன் மீண்டும் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே லாரிகள் இயக்குவதை தடை செய்து, அதற்கான மாற்று பாதைக்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.