அரியலூர் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் காலணி தொங்கவிடப்பட்டிருந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் அருகே ஓட்டக்கோயில் கிராமத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி கொடிக்கம்பத்தில் திங்கள்கிழமை காலை செருப்பு ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.
இதையறிந்த பாஜகவினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொடிக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்த செருப்பை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.