அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடக்கரை ஓரத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
ஜயங்கொண்டம் அருகே உள்ள தா. பழுரை அடுத்த அடிக்காமலை கிராமம் அருகே கொள்ளிடக் கரை ஓரத்தில் திங்கள்கிழமை காலை அவ்வழியே சென்றவர்கள் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
வெள்ளை நிற புடவை, சிவப்பு நிறத்தில் ஜாக்கெட் அணிந்திருந்த அந்தப் பெண்மணி குறித்து தா.பழுர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.