தந்தையை தாக்கிய  மகன் கைது

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தந்தையைத் தாக்கிய மகன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தந்தையைத் தாக்கிய மகன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள மேலகோவிந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அறிவழகன் (44). இவர் தனது தந்தை கலியபெருமாளிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறதில் ஆத்திரமடைந்த அறிவழகன் தனது தந்தையை தாக்கியுள்ளார். 
இதில் பலத்த காயமடைந்த கலியபெருமாள் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து அறிவழகனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com