திருமானூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் கூட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திருமானூர் வட்டார ஓய்வுபெற்ற

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திருமானூர் வட்டார ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட சங்கச் செயலாளரும், கிளை தலைவருமான தி.மா. கணேசன் தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.ஜெபமாலை வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார். 
கூட்டத்தில், உயிரிழந்த சங்க உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் திருமானூர் ஊராட்சிக்குட்பட்ட கீழ வீதி, நடு வீதி, வடக்கு வீதி, மேல வீதி உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com