செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில், வட் டார வள மையம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில், பொது மருத்துவர், எழும்பு முறிவு மருத்துவர், கண், காது-மூக்கு-தொண்டை மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு நோளுக்கான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு 6 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில், உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் உபகரணங்களும், அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் குணசேகரன், கண் மருத்துவர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.