அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்.11) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை: ஆண்டிமடம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர்,சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர்காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் மற்றும் சுற்றியுள்ளகிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது.