மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:  அரசுப் பள்ளி காவலாளி கைது

செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலாளி போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த காவலாளி போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி(60). அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர், அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் செந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. 
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கந்தசாமி சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com