அரியலூர்அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மையே சேவை இயக்கம் சார்பில் உயிரி கழிவு நீக்குதல் மேலாண்மை பயிற்சி மற்றும் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த பயிற்சியில், மருத்துவக் கழிவுகளை எப்படி அகற்றுவது, பொது கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் கலக்காமல் அகற்றுவது குறித்து விளக்கப்பட்டது.
மாநில உயிரி கழிவு நீக்குதல் மேலாண்மை (பொ) அலுவலர் மருத்துவர் குருநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஹேமச்சந்திரகாந்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் இளமதி, அரியலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், ஜயங்கொண்டம் உதவி மருத்துவ அலுவலர் மோகன் உட்பட ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.