"சிறுபான்மையினருக்கு அதிமுக துணைநிற்கும்'
சிறுபான்மையினரின் நலனுக்கு அதிமுக என்றும் துணை நிற்கும் என்றார் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொ. சந்திரசேகருக்கு ஆதரவாக, வெள்ளிக்கிழமை அரியலூர் மார்க்கெட் பகுதியிலுள்ள பள்ளி வாசலில் இருந்து தொழுகை முடித்து வெளிவந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு கேட்டு அவர் பேசுகையில், சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதோடு அவர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் இருந்தார் ஜெயலலிதா.
அவரது வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும், துணை முதல்வரும் சிறுபான்மையினரை காத்து வருகின்றனர். எனவே அதிமுக வேட்பாளர் பொ. சந்திரசேகரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். அதிமுக மாவட்ட மாணவரணிச் செயலர் ஓ.பி. சங்கர், கள்ளங்குறிச்சி பாஸ்கர், அரசு வழக்குரைஞர் சாந்தி, தேமுதிக மாவட்டச் செயலர் ராமஜெயவேல் மற்றும் பாமக, தமாகா, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.