சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆ. இளவரசன், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குசேகரித்தார்.
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர், மேலப்பழுவூர், வெங்கனூர், விளாகம், இலந்தைக்கூடம், அன்னிமங்கலம்,
அரண்மனைக்குறிச்சி, திருமானூர், வெற்றியூர், சாத்தமங்கலம்,
கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், அரியலூர் மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற்றுத் தருவேன் என்றும், அமமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.